வருகிற 24-ம் தேதி திமுக அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பு


வருகிற 24-ம் தேதி திமுக அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பு
x

கோப்புப்படம்

திமுக அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்'' நடைபெறும்.

அதுபோது அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story