இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தீக்குளிப்பு - உயிர்த்தியாகம் செய்தவருக்கு திமுக சார்பில் நிதியுதவி


இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தீக்குளிப்பு - உயிர்த்தியாகம் செய்தவருக்கு திமுக சார்பில் நிதியுதவி
x
தினத்தந்தி 26 Nov 2022 11:29 AM GMT (Updated: 26 Nov 2022 12:28 PM GMT)

திமுக சார்பில்ரூ.1 லட்சத்தை தொழில்துறை அமைச்சர் கணேசன் வழங்கினார்.

சென்னை,

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 85). இவர் நங்கவள்ளி தி.மு.க. முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் தி.மு.க. மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இவர் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கேனில் கொண்டுவந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த விவசாயி தங்கவேலின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிர்த்தியாகம் செய்து கொண்ட திமுக பிரமுகருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக சார்பில்ரூ.1 லட்சத்தை தொழில்துறை அமைச்சர் கணேசன் வழங்கினார்.


Related Tags :
Next Story