தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

தளபதிசமுத்திரம் மேலூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி


இட்டமொழி:

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை தளபதிசமுத்திரம் மேலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பிரியா வாசுதேவன், யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, எஸ்.எஸ்.கே.முருகையா பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகம்மாள் சிவன்பாண்டி, எஸ்.கே.சீனிதாஸ், செந்தில்வேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story