திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை ரத்து செய்யக் கோரிய ஜெகத்ரட்சகன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story