"அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை வரவேண்டாம்" -அதிமுக சார்பில் அறிவிப்பு பலகை


அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை வரவேண்டாம் -அதிமுக சார்பில் அறிவிப்பு பலகை
x

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை வரவேண்டாம் என்று அதிமுக சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் நேற்று அகற்றப்பட்டது. சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அகற்றி, எடப்பாடி பழனிசாமியின் மேனேஜரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் நீதிமன்ற ஆணைப்படி கழக தொண்டர்களும், ஆதரவாளர்களும் 20ம் தேதி வரை தலைமை கழகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


Next Story