சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x

2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ ேகார்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை


2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ ேகார்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம்

திருவண்ணாமலை தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 46). இவர் சைக்கிளில் வேர்க்கடலை, மாங்காய், கொய்யாக்காய் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளிடம் உணவுப் பொருட்கள் தருவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் வீராசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இரட்டை ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இன்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி பார்த்தசாரதி விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார்.

அதில், வீராசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுமிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story