புதுப்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை


புதுப்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
x
தினத்தந்தி 3 May 2023 7:00 PM GMT (Updated: 3 May 2023 7:01 PM GMT)

தேனி அருகே புதுப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி அண்ணா 3-வது தெருவை சேர்ந்த மனோகரன் மகள் கிருபா (வயது 24). இவருக்கும், கோடாங்கிபட்டியை சேர்ந்த சரவணக்குமார் (31) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது கிருபாவின் பெற்றோர் 18 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், சரவணக்குமார், அவருடைய தாய் முத்துலட்சுமி ஆகியோர் திருமணமான நாளில் இருந்து கூடுதலாக 15 பவுன் நகைகள் வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கிருபா புகார் செய்தார். அதன்பேரில், அவருடைய கணவர் சரவணக்குமார், மாமியார் முத்துலட்சுமி ஆகிய 2 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story