தூர்வாரும் பணிகள் 70 சதவீதம் நிறைவு


தூர்வாரும் பணிகள் 70 சதவீதம் நிறைவு
x

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறி உள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:-

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறி உள்ளார்.

தூர்வாரும் பணிகள்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைவடபாதி பாம்பாக்கை கன்னி வாய்க்காலை 800 மீட்டர் தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூர்வாரும் பணிகள் குறித்து கலெக்டர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் எந்திரங்கள் மூலமாக 60 சி மற்றும் டி வாய்க்கால்களில் 585 கி.மீ. தூரம் ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏ மற்றும் பி வாய்க்கால்களில் 1200 கி.மீ. தூரம் பொதுப்பணித்துறையின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது.

70 சதவீதம் பணிகள் நிறைவு

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் மூலமாகவும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணிகள் அனைத்தும் வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன. இதுவரை 70 சதவீதம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ரெகுநாதன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story