குடிநீர், கழிவுநீரகற்று வரியை 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு


குடிநீர், கழிவுநீரகற்று வரியை 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
x

குடிநீர், கழிவுநீரகற்று வரியை 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், குடிநீர் கட்டணங்களையும் வருகிற 31-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) செலுத்திடவேண்டும்.

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான 26-ந்தேதியிலும் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இயங்கும்.

நுகர்வோர்கள் இந்த வசதியை பயன்படுத்தி மேல்வரி, இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் நுகர்வோர்கள் நிலுவைத் தொகையை https://bnc.chennaimetrowater.in/#public/cus-login என்ற இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story