சம்பை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு


சம்பை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

சம்பை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை அமைப்பு கூட்டம் ராமநாதபுரம் தாலுகா சம்பை மேற்கு குடியிருப்பில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், நாகரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் பெருமாள், செயலாளர் ராஜா, பொருளாளர் லிங்கராசு ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் சம்பை கண்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரி சீரமைக்கவும், பழுதடைந்த சருக்கை மழைகாலத்திற்குள் சரி செய்யவும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் குடிப்பதற்கும், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளதால் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story