திருச்சி மாநகரில் இன்று குடிநீர் நிறுத்தம்


திருச்சி மாநகரில் இன்று குடிநீர் நிறுத்தம்
x

திருச்சி மாநகரில் இன்று குடிநீர் நிறுத்தப்படுகிறது.

திருச்சி

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி- சென்னை மெயின்ரோடு பால்பண்னை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதனால் தேவதானம், விறகுபேட்டை, கல்லுக்குழி, ஜெகநாதபுரம், அரியமங்கலம், உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய பகுதியில் உள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது. நாளை (திங்கட்கிழமை) வழக்கம் போல் குடிநீர் வினியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story