2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து


2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து
x

மயிலாடுதுறையில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- .மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் முடிகண்டநல்லூர் தலைமை குடிநீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும். எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story