ரெயில் மோதி டிரைவர் பலி


ரெயில் மோதி டிரைவர் பலி
x

அரக்கோணம் அருகே ரெயில் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் அருகே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 35). டிரைவர்.

இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து சென்ற போது அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் அந்த வழியாக வந்த ரெயில் சீனிவாசன் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story