சின்னசேலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி பஸ் டிரைவர் சாவு


சின்னசேலம் அருகே    மின்சாரம் தாக்கி பள்ளி பஸ் டிரைவர் சாவு
x

சின்னசேலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி பஸ் டிரைவர் உயிாிழந்தாா்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் ராமர் (வயது 30). இவர் சேலம் மாவட்டம், தேவியாகுறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பஸ் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றி வந்த அவர், அனைவரையும் இறக்கி விட்ட பின்னர் பஸ்சை கல்லாநத்தம் மாரியம்மன் கோவில் முன்பு வந்து நிறுத்தினார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக, தாழ்வாக சென்ற மின்கம்பி பஸ்சின் மேற்பகுதி மீது உரசியபடி இருந்துள்ளது. இதுபற்றி அறியாத, ராமர் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது வெளிப்பகுதியில் இருந்த பஸ்சின் கைப்பிடியை பிடித்தபடி இறங்கிய அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story