தூக்குப்போட்டு டிரைவர் சாவு


தூக்குப்போட்டு டிரைவர் சாவு
x

சாத்தூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் மேலக்காந்திநகரை சேர்ந்த தர்மர் மகன் கருப்பசாமி (வயது 28). இவருக்கும் அன்னலட்சுமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து. இவர்களுக்கு தர்ஷிகா (5) என்ற மகளும், பிரவீன் (2) என்ற மகனும் உள்ளனர். சரக்கு வாகன டிரைவர் வேலை செய்து வந்த கருப்பசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அன்னலட்சுமி கடந்த 17-ந்தேதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்து விட்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தாய் வீரத்தாய் சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story