டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கழிஞ்சூரில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

காட்பாடி கழிஞ்சூர் இளங்கோ தெருவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 43), டிரைவர். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆலால் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து கதிரவனின் மனைவி சுகுணா விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story