ரெயில் மோதி டிரைவர் பலி


ரெயில் மோதி டிரைவர் பலி
x

ரெயில் மோதி டிரைவர் பலியானார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள கீழவதியம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ெரயில் மோதியதில் ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கீழவதியம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஜெயபிரகாஷ் (வயது 40) என்பதும், இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு செவித்திறன் குறைவாக இருந்ததாம். ஜெயபிரகாஷ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக கீழவதியம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது அந்த வழியாக வந்த ெரயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story