பொம்மிடி அருகே தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி டிரைவர் சாவு


பொம்மிடி அருகே தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி டிரைவர் சாவு
x
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

பொம்மிடி அருகே உள்ள குக்கல்மலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 48) .லாரி டிரைவர். இவருக்கு பத்மா என்ற மனைவியும்இ சங்கீதா என்ற மகளும் வினோத் என்ற மகனும் உள்ளனர். வெங்கடாசலம் நேற்று பொம்மிடி ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story