வாகனம் மோதி டிரைவர் பலி


வாகனம் மோதி டிரைவர் பலி
x
தினத்தந்தி 9 Dec 2022 6:45 PM GMT (Updated: 9 Dec 2022 6:45 PM GMT)

வீரபாண்டி அருகே வாகனம் மோதி டிரைவர் பலியானார்.

தேனி

வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி புது ஹரிஜன காலனியை சேர்ந்தவர் ரெத்தீஷ் குமார் (வயது 38). கார் டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர் வீரபாண்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் முத்துதேவன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். தேனி-குமுளி பைபாஸ் சாலையில் தனியார் மில் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் ரெத்தீஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி முத்துக்கிளி வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story