வாகனம் மோதி டிரைவர் சாவு


வாகனம் மோதி டிரைவர் சாவு
x

மானூர் அருகே வாகனம் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள மேல பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). தனியார் நிறுவன டிரைவர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் மானூருக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். கானார்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, ஒரு பெண் குறுக்கே வந்தார். இதனால் அவர் மீது மோதிய சக்திவேல் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

அப்போது எதிரே அரசு பஸ்சை முந்தி செல்வதற்காக வந்த அடையாளம் தெரியாத வாகனம், சக்திவேலின் மீது ஏறி நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சக்திவேலின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story