டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சேந்தமங்கலத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள ராஜபுரத்தை சேர்ந்தவர் பாலு மகேந்திரன் (வயது 27). லாரி டிரைவர். இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. அதைதொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சரண்யா, கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

அதையடுத்து பாலு மகேந்திரன், மாமனார் வீட்டிற்கு சென்று சரண்யாவை குடும்பம் நடத்துவதற்கு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த நிலையில் மகேந்திரன் காணப்பட்டு வந்தார். அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு முற்றத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலு மகேந்திரனின் பிணத்தை கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி குடும்பம் நடத்த வராததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story