குடும்ப தகராறில் டிரைவர் தற்கொலை


குடும்ப தகராறில் டிரைவர் தற்கொலை
x

பள்ளிபாளையத்தில் குடும்ப தகராறில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.n

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் தாஜ்நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 44). இவரது கணவர் செந்தில் (50), டிரைவர். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. பழனியம்மாள் ஈரோட்டில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்து வருகிறார். செந்தில் கடந்த 2 வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மீண்டும் காலையில் கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் பழனியம்மாள் ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் செந்தில் தனது மகன் சுரேஷ்குமாருக்கு போன் செய்து, குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு செல்போனை ஆப் செய்துவிட்டார். உடனே சுரேஷ்குமார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது செந்தில் வீட்டின் ஒரு அறையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தாய் பழனியம்மாள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு தனியார் மருத்துவமனையில் செந்திலை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் ்பழனியம்மாள் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலின் உடலை கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story