போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x

நாட்டறம்பள்ளி அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். அப்போது மாணவர்கள் பள்ளி பருவத்தில் கல்வியில் கவனம் செலுத்தி உயர்கல்வி பயின்று நல்ல நிலைக்கு செல்ல தங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும். இளம் வயதில் மது பழக்கம், புகைபிடித்தல் உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையாவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். வளர் இளம் பெண்கள் இளம் வயதில் இனக்கவர்ச்சி மூலம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால் சிறுவயதிலேயே திருமணம் ஆகி தங்களின் பிரகாசமான வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். எனவே பள்ளி மாணவிகள் சிறு வயது திருமணத்தை தவிர்க்க வேண்டும். செல்போன் பயன்படுத்துபவர்கள் நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தினமும் கண்காணிக்க வேண்டும் என்று அறுவுறுத்தினர்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் தெரிவித்த 3 மாணவ-மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் ரொக்கப் பரிசு வழங்கினார்.


Next Story