போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ஆயிலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி போலீஸ் நிலையம் சார்பில் ஆயிலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆயிலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பால் தேவசிகாமணி வரவேற்றார். ரத்தினகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story