மருந்து கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை


மருந்து கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
x

தூசி அருகே மருந்து கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

தூசி

ராணிப்பேட்டை நாகலேரியார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47), விவசாயி. இவரது தம்பி சரவணன் (46). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தார்.

இவர் சில ஆண்டுகளாக உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி சரவணன் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பில்லாந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரி அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுரேஷ் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story