டிரைவரின் கவனக்குறைவால் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி படுகாயம்


டிரைவரின் கவனக்குறைவால்  பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி படுகாயம்
x

தேனியில் டிரைவரின் கவனக்குறைவால் பஸ் சக்கரத்தில் மூதாட்டி கால் சிக்கி படுகாயம் அடைந்தார்

தேனி

தேனி அருகே கோடாங்கிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த காளிமுத்து மனைவி லட்சுமி (வயது 65). இவர், நேற்று கம்பம் சென்று விட்டு, தேனிக்கு அரசு பஸ்சில் வந்தார். தேனி பழைய பஸ் நிலையத்தில் பஸ் வந்தவுடன் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது பஸ் டிரைவர் கவனக்குறைவாக பஸ்சை முன்பக்கமாக நகர்த்தியதாக கூறப்படுகிறது. அப்போது பஸ் முன்பக்க சக்கரம் லட்சுமியின் காலில் ஏறியது.

இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அவருடைய மகன் அய்யப்பன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பஸ் டிரைவரான பாலக்கோம்பையை சேர்ந்த ராசி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story