வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு

வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்தது.
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.150-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.250-க்கும், ரோஜா ரூ.250-க்கும் முல்லை ரூ.1,000-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





