நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


நீர்வரத்து சீரானதால்  கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x

நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனி

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இதற்கிடைேய கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் பெய்த ெதாடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீா்வரத்து சீரானதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.


Next Story