மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது


மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது
x

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.

புதுக்கோட்டை

கீரனூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நகர், ஆகிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கீரனூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என்று செயற்பொறியாளர் பிரேம்ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Next Story