பி.பி.அக்ரஹாரம் ஜோசப் தோட்டம் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை சரிசெய்ய வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


பி.பி.அக்ரஹாரம் ஜோசப் தோட்டம் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை சரிசெய்ய வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x

பி.பி.அக்ரஹாரம் ஜோசப் தோட்டம் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை சரிசெய்ய வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஜோசப் தோட்டம் பகுதியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜோசப் தோட்டம் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி செல்கிறது. இதில் சில மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. மின் கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பி வெளியே தெரிகிறது.

அந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. உயர் மின் அழுத்த கம்பி செல்லும் பாதையின் கீழே தினமும் ஏராளமான பொதுமக்கள் கடந்து செல்கிறார்கள். மின் கம்பம் உடைந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். மேலும் மழை நேரங்களில் இந்த மின் கம்பம் மூலம் மின் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு, மின்வாரிய அதிகாரிகள், ஜோசப் தோட்டம் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story