பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை -கலெக்டர் பழனி தகவல்


பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை -கலெக்டர் பழனி தகவல்
x

விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மேற்கண்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற மற்ற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் student login சென்று ஆதார் எண் கொடுத்து e-KYC verification செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்பட்டால் தங்கள் கல்லூரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் பணிக்கு விண்ணப்பங்களை மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கல்லூரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தையோ 04146-294178 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story