கல்வி உபகரணங்கள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் மற்றும் மேக்ஸ்வெல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். நாடார் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்.வி.ராமர், கே.டி.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவில் மேக்ஸ்வெல் அறக்கட்டளை நிறுவனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





