நாளை முதல் அமலுக்கு வரும் சுங்கக் கட்டணம் உயர்வு...!


நாளை முதல் அமலுக்கு வரும் சுங்கக் கட்டணம் உயர்வு...!
x

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓமலூர், தர்மபுரி, சமயபுரம், கரூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி (நாளை) முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது.

தினமும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட 22 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் இந்த

சமயபுரம் சுங்க சாவடியில் காருக்கு ஒரு நாள் சுங்க கட்டணம் ரூ. 45-ல் இருந்து ரூ. 45 ஆகவும் மாதாந்திர கட்டணம் ரூ.1,400-ல் இருந்து 1,605 ஆக உயர்த்தப்படுகிறது.

பேருந்துக்கு சுங்கக் கட்டணம் ரூ.165-ல் இருந்து ரூ.185 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4,905 இல் இருந்து ரூ.5,620 ஆக உயர்கிறது. லாரிக்கு சுங்க கட்டணம் ரூ.265 இல் இருந்து ரூ.300 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.7,880 இல் இருந்து ரூ.9,035 ஆக உயர்த்தப்படுகிறது.

அதாவது, முன்பிருந்த கட்டணத்திலிருந்து 15% உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி சுங்கச் சாவடி வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

அங்கு கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறை அந்த வழியாக பயணிக்க கட்டணமாக கார் மற்றும் ஜீப் ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.230 இல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்ந்துள்ளது.

கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு நாளில் பலமுறை பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.344-ல் இருந்து ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கார் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாதக் கட்டணமானது ரூ.1,955-ல் இருந்து ரூ.2,210 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. லாரி மற்றும் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.6,845-ல் இருந்து ரூ.7,735 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இந்த சுங்கக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Next Story