எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில்ஆடி கிருத்திகை விழாவில் பேனர்கள் வைக்க தடை


எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில்ஆடி கிருத்திகை விழாவில் பேனர்கள் வைக்க தடை
x

எலத்தூர்மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க தடைவிதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

எலத்தூர்மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க தடைவிதிக்கப்பட்டது.

நட்சத்திர கோவில்

கலசபாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் உள்ள மலை மீது வள்ளி தேவசேன சமேத சுயம்பு நட்சத்திர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இவ்விழாவில் சுற்றுவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா வருகிற 9ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலசபாக்கம் தி.சரவணன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜராஜேஸ்வரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆடி கிருத்திகை விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மலையை சுற்றி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சாலையை அகலப்படுத்தி சுத்தம் செய்து தர வேண்டும்.

திருவண்ணாமலை, போளூர் பகுதியில் இருந்து கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதும், மலை மீது ஏறி செல்லும் பக்தர்களுக்கு வழியில் மருத்துவ முகாம் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டன.

அன்னதானம்

மேலும் அன்னதானம் செய்யும் பக்தர்கள் இந்து சமய அறநிலைத்துறையிடம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும். ஆடிக் கிருத்திகை விழாவில் கோவில் அருகில் அரசியல் கட்சி சார்ந்த பேனர்களை வைக்க தடை விதிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story