வந்தவாசி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை


வந்தவாசி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

வந்தவாசி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

வந்தவாசியை அடுத்த கூனம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிலால் (வயது 76). இவர் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி, தொண்டையில் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனையொட்டி அவர் தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணிலால் இறந்து விட்டார். இது குறித்து மகள் ரேவதி கொடுத்த புகாரின் பேரில் தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=======


Next Story