கோழிக்கூண்டில் புகுந்த பாம்பு கடித்து முதியவர் சாவு


கோழிக்கூண்டில் புகுந்த பாம்பு கடித்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோழிக்கூண்டில் புகுந்த பாம்பு கடித்து முதியவர் சாவு

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). இவர் முறையூர் மேலஊருணி பகுதியில் ஆட்டுமந்தை அமைத்து ஆடு, கோழிகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் கோழி கூண்டுக்குள் கோழிகள் தொடர்ந்து சத்தம் போட்டுள்ளன. இதனால் கோழி கூண்டுக்குள் கையை விட்டபோது அதற்குள் பதுங்கி இருந்த பாம்பு பெரியசாமியை கடித்தது. இதையடுத்து பெரியசாமிக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story