வாகனம் மோதி முதியவர் பலி


வாகனம் மோதி முதியவர் பலி
x

தூசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே மாமண்டூர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65), விவசாயி.

இவர் கடந்த 14-ந் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டின் அருகில் காஞ்சீபுரம்- வந்தவாசி சாலையில் நடை பயிற்சி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயமடைந்த அவரை அங்கு உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுப்பிரமணியின் உறவினர் மோகன் கொடுத்த புகாரின்ேபரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story