மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி


மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
x

மின்சாரம் பாய்ந்து முதியவர் பலியானார்.

கரூர்

கரூர் மண்மங்கலம் அருகே உள்ள காளிபாளையம் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 68). இவர் தனது வீட்டில் இருந்து மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுப்பிரமணி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Related Tags :
Next Story