மோட்டார்சைக்கிள் விபத்தில் முதியவர் பலி


மோட்டார்சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
x

மோட்டார்சைக்கிள் விபத்தில் முதியவர் பலியானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

மோட்டார்சைக்கிள் விபத்தில் முதியவர் பலியானார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தன பள்ளி சாம கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) விவசாயி. இவர் பச்சூர்- கொத்தூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பட்டாசு கடை அருகில் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து மகன் வடிவேல் கொடுத்து புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் விபத்து ஏற்படுத்தியதாக மேல்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (56) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story