மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் இறந்தார்

திருச்சி

முசிறி, ஜூன்.5-

தொட்டியம் அக்ராகாரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் வேல்முருகன் (வயது 47). இவர் முசிறி கொக்குவெட்டியன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, நடந்து சென்ற 65 வயது மதிக்கதக்க முதியவர் மீது மோதினார். இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த முதியவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். வேல்முருகன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் இறந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story