அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலியானார்.
உப்பிலியபுரத்தை அடுத்த பச்சைமலை மாயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மூக்கன் (வயது 57). விவசாயியான இவர் மோட்டார் சைக்கிளில் டாப்செங்காட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்றுவிட்டு மாயம்பாடி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். சின்னநாகூர் அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மூக்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீசார், துறையூரை சேர்ந்த டிரைவர் சந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





