அரசு பஸ் மோதி முதியவர் பலி


அரசு பஸ் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 80). நேற்று முன்தினம் இவர், தனது மகளை பார்ப்பதற்காக கொண்டமநாயக்கன்பட்டிக்கு வந்தார். பின்னர் மகளை பாா்த்துவிட்டு தேனி-மதுரை நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்ேபாது பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story