அரசு பஸ் மோதி முதியவர் பலி


அரசு பஸ் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 11 April 2023 12:30 AM IST (Updated: 11 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆயக்குடி அருகே பஸ் மோதி முதியவர் ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). நேற்று இவர், பச்சளநாயக்கன்பட்டி பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு அவர், திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் பழனியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார்அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story