வாகனம் மோதி முதியவர் பலி


வாகனம் மோதி முதியவர் பலி
x

வாகனம் மோதி முதியவர் பலியானார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

லாலாபேட்டை அருகே மகாதானபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி அருகே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஓருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். இதுகுறித்து மகாதானபுரம் (வடக்கு) கிராம நிர்வாக அதிகாரி குமரேசன் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story