முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

திருநெல்வேலி

மானூர்:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை சேர்ந்தவர் முத்து சுப்பிரமணியன் என்ற குமாரசாமி (வயது 68). இவரது குலதெய்வ கோவில் மானூர் அருகே உள்ள வடக்கு செழியநல்லூரில் உள்ளது. அங்கு கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை பார்த்து வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு கடந்த 6-ந் தேதி சென்றவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது மனைவி லலிதா, கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரித்தனர். இந்தநிலையில் முத்து சுப்பிரமணியன் வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள குளத்துமதகு ஷட்டரில் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story