முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

திண்டுக்கல்லில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 72). கூலித்தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் சாணி பவுடரை தண்ணீரில் கரைத்து குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார். இந்த தற்கொலை குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story