விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை


விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
x

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி புஷ்பராணி (வயது 75). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாகவும், மருத்துவமனைகளில் காண்பித்தும் நோய் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புஷ்பராணி விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story