இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்- டெல்லி ஐகோர்ட்டில் இபிஎஸ் மனு


இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்- டெல்லி ஐகோர்ட்டில் இபிஎஸ் மனு
x

எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது செயல்பட்டு வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். மேலும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி பிரதீபா எம்.சிங் வருகிற 10-ந்தேதி


Next Story