ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு


ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
x
கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி பகண்டை கூட்டுரோட்டில் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளை தேர்வு செய்தனர், அதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவராக யால் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமியும், துணை தலைவராக பாவந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் செயலாளராக கடுவனூர் ஏழுமலை, துணை செயலாளராக அவிரியூர் திருமலை, பொருளாளராக சித்தப்பட்டினம் சிலம்பன், கவரவ தலைவராக கள்ளிப்பாடி சரோஜா ராமநாதன், சட்ட ஆலோசர்களாக ஈருடயாம்பட்டு சிரஞ்சீவி, பாசார் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக மேலந்தல் செல்வி பரந்தாமன், ஜம்பை கவிதா துரைசாமி, திருவரங்கம் ராமச்சந்திரன், ஓடியந்தல் இந்திரா கணேசன், பெரியகொள்ளியூர் வெண்ணிலா தயாளன், கானங்காடு பவானி தமிழ்ச்செல்வன், சூளாங்குறிச்சி கோமதி சுரேஷ், குன்னியூர் கல்யாணி ஏழுமலை, மேலப்பழங்கூர் பிரவீனா பழமலை, ஏந்தல் லட்சுமி முருகேசன், ஜம்படை கல்யாணி ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.




Next Story