ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்வு


ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்வு
x

விளக்கூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள விளக்கூர் ஊராட்சியில் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது துணை தலைவர் பதவிக்கு கவுன்சிலர்களுக்கு இடையே கடும்போட்டி நிலவியது. மேலும் அங்கு சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயமும் உருவானது. இதை தவிர்க்க துணை தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் துணை தலைவருக்கான தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வார்டு உறுப்பினர்களின் வருகை குறைவாக இருந்ததால் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று விளக்கூரில் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான தயாபரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 3-வது வார்டு உறுப்பினர் நடராஜன் (வயது 35) என்பவர் போட்டியின்றி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தியாக துருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story